வங்கதேச அணி ரன் குவிப்பு

காலே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சீசன், ஒரு பகுதியாக இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 292/3 ரன் எடுத்திருந்தது. ஷாண்டோ (136), முஷ்பிகுர் (105) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 264 ரன் சேர்த்த போது, ஷாண்டோ (148) அவுட்டானார். அடுத்து முஷ்பிகுர், லிட்டன் தாஸ் இணைந்தனர். இருவரும் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்த, வங்கதேச அணியின் ஸ்கோர் 400/4 ரன்களை எட்டியது. மழை காரணமாக போட்டி தடை பட்டது.
முஷ்பிகுர் 150 ரன்களை கடந்தார். 5வது விக்கெட்டுக்கு 149 ரன் சேர்த்த போது, அசிதா பந்தில் முஷ்பிகுர் (163 ரன்) அவுட்டானார். தன் பங்கிற்கு அரைசதம் அடித்த லிட்டன் தாஸ், 90 ரன் எடுத்த போது, ரத்னாயகே சுழலில் சிக்கினார். இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 484/9 ரன் எடுத்திருந்தது. அசிதா, மிலன், ரத்னாயகே தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
மேலும்
-
ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்
-
தரமற்ற விதை, பூச்சிக்கொல்லி தடுக்க விரைவில் சட்டத்திருத்தம்
-
110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு
-
அதிகாரிகளின் அலட்சியத்தால் மாசுபடும் தென்பெண்ணையாறு... மீட்கப்படுமா?
-
பசுமை நகரம் 'மகுடம்' சூடுமா மாநகராட்சி?
-
அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 1,742 மாணவ, மாணவியர் எங்கே போனார்கள்? கணக்கெடுப்பில் அதிர்ச்சி!