ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்
கோவை: கோவை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
கோவை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், டெக்னீசியன், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான தொழிற்பிரிவு படிப்புகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நாளை(இன்று) முதல் துவங்குகிறது.
சேர விரும்புவோர், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, கோவை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைக்கட்டி மற்றும் வால்பாறையிலுள்ள, சேர்க்கை உதவி மையங்களை அணுகி, சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.
மேலும்
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை