காட்சிப் பொருளான இ லவச உடற்பயிற்சி நிலைய ம் மீண்டும் திறக்க இளைஞர்கள் கோரிக்கை

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் பராமரிப்பு இன்றி பாழானதால் மூடிக்கிடக்கும் உடற்பயிற்சி நிலையத்தை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மக்களும் ஆரோக்கியமாக வாழ, தினசரி உடற்பயிற்சிகள் மேற்கொள்ள மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பீல், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது.

அம்மா பூங்காவில் தினசரி ஏராளமான முதியோர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி நிலையம் திறந்தபோது, இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர். உடற்பயிற்சி நிலையத்தில் உபகரணங்களை சரிவர பராமரிக்கப்படவில்லை.

பராமரிப்பதிற்கு தனி ஆட்கள் யாரும் நியமிக்காததால், உடற்பயிற்சி உபகரணங்கள் பராமரிக்க முடியாமல் உடைந்து கிடக்கிறது. இதனால் உடற்பயிற்சி நிலையம் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்களை சரிசெய்து, பயிற்சி நிலையம் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை குறிப்பிட்டு அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்கள் போலீஸ், ராணுவம், வனத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகளில் கலந்து கொள்ள வசதியாக உடற்பயிற்சி செய்வதற்கு என அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் பராமரிக்க இயலாமல், பாழாகி கிடப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இந்த உடற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், அதனை சரியாக பராமரிக்க தனி ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவலுார்பேட்டை சுற்றுவட்டார இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement