அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
வால்பாறை : வால்பாறையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
பொது மக்கள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கனமழை பெய்யும் நிலையில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பல மணி நேரம் மின்வெட்டு நீடிக்கிறது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் அச்சத்துடன் வசிக்க வேண்டியுள்ளது. எனவே, மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது