பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு

நெகமம் : நெகமம் அரசு பள்ளியில், உலக பாலைவனமாதல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக பாலைவனமாதல் தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கனகராஜன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ராஜா முன்னிலை வகித்தார்.
பள்ளி வளாகத்தில், ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டு, கூண்டு அமைக்கும் பணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'உலக பாலைவனமாதல் தினம், ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான சர்வதேச முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பாலைவனமாதல் தடுப்பது குறித்தும், மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வளம் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களிடம் விளக்கப்பட்டது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
Advertisement
Advertisement