ரேஷன்கடை பெண் விற்பனையாளர் மீது தாக்குதல்
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்தமேல்குமாரமங்கலம் ரேஷன்கடை விற்பனையாளர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டின் மேல்குமாரமங்கலம் பகுதி நேர ரேஷன்கடை இயங்கி வருகிறது.
கடையின் விற்பனையாளர் எழிலரசி நேற்று பணியில் இருந்தார். அப்போது அதே கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் மனைவி வெண்ணிலா இடைமறித்து என்னுடைய கார்டுக்கு பொருட்களை வழங்கிவிட்டு தான் முன்னாடி வரிசையில் உள்ளவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விற்பனையாளர் எழிலரசியின் கன்னத்தில் வெண்ணிலா அறைந்து, கொலைமிரட்டல் விடுத்தார்.
எழிலரசி,27; புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
Advertisement
Advertisement