கள்ளக்குறிச்சியில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்று, சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கி பேசினார்.

தொடர்ந்து, மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுத்தல், கல்வராயன்மலை பகுதியை சுற்றுலா தளமாக மாற்றி பராமரித்தல், கோமுகி ஆற்றில் தடுப்பணைகளை கட்டி, பாசன பரப்பை அதிகரித்தல், கள்ளக்குறிச்சி புதிய பஸ்நிலையத்தை மக்களுக்கு பயனுள்ள இடத்தில் கட்டுதல், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவாக அமைத்தல், சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைத்தல், கள்ளக்குறிச்சியில் புதிய விளையாட்டு திடல் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில மருத்துவரணி துணை தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், செழியன், மாவட்ட தலைவர் சத்யா, மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி ஹரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement