விஷம் குடித்த கல்லூரி மாணவர் பலி

சின்னசேலம், : சின்னசேலம் அருகே, தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.

சின்னசேலம் அடுத்த வி.மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல் மகன் வைரமுத்து, 19; இவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி. ஏ., பொருளியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு சரி வர செல்லாததால் தந்தை தனவேல் இவரை கண்டித்தார்.

இதனால் மனம் உடைந்தவர், கடந்த 1ம் தேதி காலை, 11:00 மணிக்கு களைக்கொல்லி குடித்து மயங்கினார்.

அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு உயிரிழந்தார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement