தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பு
அன்னுார் : அன்னுாரில் ஏல விற்பனையில், தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைத்தது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வேளாண் விளை பொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் 3 ஆயிரத்து 692 கிலோ எடையுள்ள, 9 ஆயிரத்து 794 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இதன் மதிப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும். ஏலத்தில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தது 58 ரூபாய் 60 காசு முதல், அதிகபட்சம் 66 ரூபாய் 26 காசு வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை 227 கிலோ ஏலத்துக்கு வந்திருந்தது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 170 ரூபாய் 89 பைசா முதல், அதிகபட்சமாக 225 ரூபாய் 50 காசுக்கு விற்பனையானது. தொடர்ந்து தேங்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இத்தகவலை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.
மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்