பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை

வாஷிங்டன்: பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வி பயில்வதற்காக, அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்காக மாணவர்கள் விசாவை அமெரிக்க வழங்கி வருகிறது.
ஆனால், கடந்த மாதம் மாணவர்கள் விசாவுக்கான நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களின் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளின் விபரங்களை விண்ணப்பங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சமூக வலைதளப் பக்க கணக்குகளின் பதிவுகளை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுக்கோ, மக்களுக்கோ எதிராக பதிவுகளை பகிர்ந்துள்ளார்களா? என அவர்களின் சமூக வலைதளப் பக்க செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தப் புதிய நடைமுறைகள் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்