கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை

கரூர்: கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் தமிழரசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திருட்டு வழக்கில் ரவுடி பென்சில் தமிழரசனை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடி பென்சில் தமிழரசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் காயமடைந்த ரவுடி தமிழரசன் கைது செய்த போலீசார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது. கைது செய்ய சென்ற போது, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து (2)
rama adhavan - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 10:16 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 09:27 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
Advertisement
Advertisement