டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து பிரதமர் ஷின்வத்ரா

பாங்காக்: கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன்சென் உடனான டெலிபோனில் பேசிய உரையாடல் கசிந்த விவகாரம், நாட்டு மக்களிடம் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ரா, இன்று மன்னிப்பு கேட்டார்.
ஆசிய நாடான தாய்லாந்து, தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது பிரதமராக பேடோங்தரன் ஷின்வத்ரா உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன்சென் உடன் ஷின்வத்ரா இருநாட்டு எல்லை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகுறித்து பேசினார். இந்த உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,நாட்டு மக்கள் கொத்தளிப்புக்கு உள்ளானார் ஷின்வத்ரா.
ஷினவாத்தின் பியூ தாய் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பும்ஜெய்தாய் கட்சி, கூட்டணியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது. ராணுவத்தின் மரியாதையை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. அக்கட்சியின் அறிவிப்பு, ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஷின்வத்ரா நாட்டு மக்களிடம் இன்று மன்னிப்பு கோரினார். அவருடன் நாட்டின் ராணுவத் தளபதிகளும் பியூ தாய்க் கட்சியின் முக்கியத் தலைவர்களும் இருந்தனர்.
மேலும்
-
பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது
-
தயாராகிறது சர்வதேச ஹாக்கி மைதானம் 13 ஆண்டு இழுபறி திட்டம் நிறைவேறும் தருணம்
-
ரேஷன் கடைக்கு முழு நேர ஊழியர் நியமனம்: கூட்டுறவு அதிகாரி உறுதி
-
சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு
-
அர்ப்பணிப்பு உணர்வுடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும்! பயிற்சி நிறைவு விழாவில் சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., பேச்சு
-
நகரங்களில் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்