ஆசிய வில்வித்தை: இந்தியா அபாரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடக்கிறது. ஜூனியர் ரிகர்வ் பிரிவு அணிகளுக்கான அரையிறுதியில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் விஷ்ணு, பராஸ் ஹூடா, ஜுயல் சர்கார் இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை சந்தித்தது. இதில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் 'நம்பர்-3' ஜப்பான அணியை சந்திக்கவுள்ளது.
கலப்பு ரிகர்வ் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, விஷ்ணு ஜோடி, 5-3 என்ற கணக்கில் சிங்கப்பூரின் தபிதா, எர்ன் லின் ஜோடியை வென்று, பைனலுக்கு முன்னேறியது.
காம்பவுண்டு அணிகளுக்கான அரையிறுதியில் குஷால், கணேஷ், மிஹிர் இடம் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டி 232-232 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் இந்தியா 30-29 என வென்றது. பைனலில் கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.
இதுவரை இந்தியாவின் 5 அணிகள் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
மேலும்
-
அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; தற்கொலை படைகளை உருவாக்கியது அம்பலம்
-
'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'
-
பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?
-
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
-
'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்
-
தி.மு.க., கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு; உண்மை என்கிறார் காங்., முன்னாள் தலைவர்