நிலுவை வழக்குகளை முடிக்க அதிகாரிகளுக்கு எஸ்.பி.,அட்வைஸ்  

கடலுார: கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கிப் பேசுகையில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் கடந்த மாதத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீஸ்துறையைச் சேர்ந்த 235 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.



Advertisement