தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்டம், காணை தெற்கு, வடக்கு, மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கெடாரில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பார்வையாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி பேசுகையில், 'முகவர்கள் தங்கள் பகுதி வீடுகளுக்கு சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும், செய்து கொடுத்துள்ள அடிப்படை வசதிகளை எடுத்துக்கூறி உறுப்பினராக சேர்க்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், முகவர்களுக்கு, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், முருகன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், துணை சேர்மன் வீரராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்