மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு
புதுச்சேரி : ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியை திசை திரும்பி, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மோதிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொசப்பாளையம், திருமால் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் தேவநாதன், 76; ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி.
இவரது வீட்டிற்கு கடந்த 17ம் தேதி வந்த அடையாளம் தெரியாத நபர், வீடு வாடகை மற்றும் விற்பனைக்கு உள்ளதா என, கேட்டார்.
அதற்கு, தற்போது வீடு ஏதும் விற்பனைக்கு இல்லை என, தேவநாதன் கூறியுள்ளார். அப்போது, தேவநாதன் கையில் அணிந்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க மோதிரத்தை பார்த்து, நன்றாக உள்ளதாக கூறி, அந்த மோதிரத்தை மர்ம நபர் வாங்கி பார்த்தார்.
திடீரென அந்த நபர், தேவநாதனை திசை திருப்பி விட்டு, தங்க மோதிரத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தேவநாதன் அவரை பல்வேறு இடங்களில் தேடியும், மர்மநபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தேவநாதன் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்