ராகுல் பிறந்தநாள்
வேடசந்துார்: வட்டார, நகர காங்., சார்பில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழாவையொட்டி மாரியம்மன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர்கள் சதீஷ், பகவான், நகர தலைவர் ஜாபர் அலி, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராஜா, முன்னாள் நகர தலைவர் வெற்றிவேல் பங்கேற்றனர்.
வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயிலில் காங்., சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேற்கு வட்டார தலைவர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரெங்கமலை பங்கேற்றனர். வடமதுரையில் கிழக்கு வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமையில் இனிப்பு வழங்கினர்.
சித்தையன்கோட்டை: அரசு துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு சார்பில் நல உதவிகள் வழங்கல் நடந்தது. வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கலாவதி வரவேற்றார். மாவட்ட ஆராய்ச்சி துறை தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார்.
மேலும்
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!