இளைஞரை அடிக்கும் வீடியோ வைரல் இருதரப்பிலும் தலா இருவர் கைது

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அடித்து காயப்படுத்தும் வீடியோ வைரலாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பழநி அருகே பெருமாள் புதுாரை சேர்ந்தவர் நிர்மல் 23. இவருக்கும் பாப்பம்பட்டி பகுதியில் வசிக்கும் கருப்புசாமி 57, அலைபேசியை திருடியதாக முன்விரோதம் ஏற்பட்டது. ஜூன் 15ல் நிர்மல் அவரது உறவினர்கள் கருப்புச்சாமியை தாக்கினர்.

கருப்புசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதை தொடர்ந்து ஜூன் 18 ல் கருப்புசாமியின் உறவினர்கள் நிர்மலை தாக்கி வீடியோ எடுத்துள்ளனர். இதன் வீடியோ வைரலானது. இந்நிலையில் நிர்மல் புகாரில் கருப்பு சாமியின் உறவினர்களான பாப்பம்பட்டியை சேர்ந்த காளிமுத்து 56, ஜெகதீஷ் 23 ,ஆகியோரையும், கருப்புசாமி புகாரில் நிர்மல், பாப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய நபர்களையும் நெய்க்காரப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

Advertisement