குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
ஆண்டிபட்டி: குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத் துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகை ஆறு, வைகை ஆறு குன்னூர் பகுதியில் உள்ள உறை கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஆற்றில் போதுமான அளவு நீர் வரத்துஇல்லை.
இதனால் உறை கிணறுகளில் ஊற்றுநீர் மட்டுமே கிடைத்து வந்தது. சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரும் குன்னூர் வழியாக வைகை அணையில் சேருகிறது.
தற்போது ஆற்றில் உள்ள உறை கிணறுகளை சுற்றிலும் நீர் செல்கிறது. கடந்த சில மாதங்களில் ஆற்றில் சேர்ந்த கழிவுகள், கசடுகள் நீருடன் அடித்து செல்லப்படுகின்றன. இதனால் உறை கிணறுகளில் சுரக்கும் நீரும் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. பல கிராமங்களில் சுத்திகரிக்கப்படாத நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உறை கிணறுகளில் இருந்து பம்ப் செய்யப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு பிளீச்சிங் கலந்து விநியோகம் செய்யப்பட்டாலும் குடிநீரை காய்ச்சி பயன்படுத்துவது அவசியம் என்று பொதுமக்களை சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்