வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8.5 லட்சம் மோசடி 5 பேர் மீது போலீஸ் வழக்கு

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே, வைகைபுதூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் தினேஷ் 36, இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆண்டிபட்டி சீனிவாசா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி, செந்தில், முருகன், ஏமா, ரம்யா ஆகியோர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். 2018ம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் பில் கலெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர்.

அந்த வேலை கிடைக்கவில்லை என்று 2022ல் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சில தவணைகளில் ரூ.3.5 லட்சம் என மொத்தம் ரூ.8.5 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் வேலை வாங்கி தராமலும் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். வேலை கிடைக்காததால் தினேஷ் பணத்தை திருப்பி தினேஷ் கேட்டுள்ளார். அப்போது பணம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து தினேஷ் ஜூன் 11ல் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் பணம் பெற்று ஏமாற்றிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement