சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம், காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செம்மலை மகன் கலியமூர்த்தி,39; இவருக்கும் பழனிமுத்து மனைவி பாப்பாத்திக்கும், பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சனை உள்ளது.

கடந்த 12ம் தேதி காலை 8:30 மணிக்கு, பாப்பாத்தி மற்றும் அவரது தாய் பிச்சையம்மாள், மகன் அருண், உறவினர் வெங்கடேசன் ஆகியோர் கலியமூர்த்தியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement