வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் வீட்டுப்பணி தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் விடுத்த செய்திக்குறிப்பு:
வீட்டுப்பணி தொழிலாளர்களை இணையதளம் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பணியாளர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள் ளிட்ட அசல் ஆவணங்களுடன், எண்23/ஏ, தாய் இல்லம், அண்ணாநகர் பிரதான சாலை, கள்ளக்குறிச்சி - 606202, என்ற முகவரியில் இயங்கும் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து, நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்