வேளாண் திட்டங்கள் ஆய்வு

தியாகதுருகம்: தியாகதுருகம் வட்டாரத்தில் நடக்கும் வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு நடந்தது.
தியாகதுருகம் வட்டாரம் வட தொரசலுார் கிராமத்தில் நடக்கும் வேளாண் திட்டங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
வேளாண்மைத்துறை மூலம் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் பசுந்தாள் விதை பயிரிட்ட விவசாயி மணிகண்டனின் வயலை பார்வையிட்டு, மானியம் மற்றும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்வதின் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வில் கலெக்டர் பிரசாந்த், வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்
ஜோதிபாசு, வேளாண்மை உதவி இயக்குநர் ரகுராமன் அங்கு, துணை வேளாண்மை அலுவலர் சிவநேசன், உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
Advertisement
Advertisement