விரிவுரையாளர் வீட்டில் நகை திருட்டு
புதுச்சேரி : அரசு சட்டக் கல்லுாரி விரிவுரையாளர் வீட்டில் தங்க கம்மல் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, அண்ணா நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் ஞானசம்பந்தன். இவரது மனைவி அறிவழகி, 48; விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர். இவரது வீட்டில் வானுார் அடுத்த சேமங்கலத்தை சேர்ந்த மலர் என்பவர் வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த 500, 1000 பணம் அடிக்கடி காணாமல் போனது. இதற்கிடையே, அறிவழகியின் 4 கிராம் தங்க கம்மல் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மலரிடம் விசாரித்தபோது, சரியான பதில் அளிக்கவில்லை. அதன்பின் மலர் வேலைக்கும் வரவில்லை.
இந்நிலையில், அறிவழகி, நகை மாயமானதில் வீட்டில் வேலை செய்த மலர் மீது சந்தேகம் இருப்பதாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்