நலவாரியத்தில் பதிவு செய்ய திருநங்கைகளுக்கு அழைப்பு

ஊட்டி: நல வாரியத்தில் பதிவு செய்ய திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நலத்துறை அறிக்கை:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகள் நல வாரியம் வாயிலாக அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று பயனடையலாம்.

திருநங்கைகள் நல வாரியம் இணையதளத்தில் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள திருநங்கை, திருநம்பி, இடை பாலினர்களின் விவரங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் இம்மாதம், 24ம் தேதி ஊட்டியில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடை பாலினர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement