24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 24ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. சப் - கலெக்டர் (பொ) தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.

எனவே, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய குறைகள், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தெரிவித்தார்.

Advertisement