கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை கொள்முதல் நிலையங்களில், வரத்து அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்த நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு, பசுந்தேயிலை வரத்து, படிப்படியாக வரத்து உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 15 முதல், 22 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப, விலை கிடைத்து வருகிறது. இடுபொருட்கள், தோட்ட பராமரிப்பு செலவு மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் விவசாயிகளுக்கு அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்துவரும் விலை, போதுமானதாக இல்லை.
கடந்த காலங்களில் ஒப்பிடுகையில், இந்த விலை விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ள நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கூடுமானவரை, ஏஜென்ட்கள் வாயிலாக, பசுந்தேயிலையை பறித்து, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வினியோகித்து வருகின்றனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும்
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்