முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில், முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் உள்ள கோவில்களின் மாதிரியை அமைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, இந்து முன்னணி தொடர்ந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்களை குளறுபடி இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் 'இ--பாஸ்' நடைமுறையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையே நாடுமாறு இந்து முன்னணி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கி, வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
- -நமது சிறப்பு நிருபர் -
மேலும்
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்