அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

1

கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்டின் நிம்தி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பொலிரோ ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.


அப்போது, நம்சோல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த டிரக் மீது பொலிரோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.


தூக்க கலக்கத்தில் சிறு தவறு நிகழ்ந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், இரவு நேரம், அதிகாலை நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

Advertisement