பங்கு சந்தை நிலவரம்

சென்செக்ஸ் 1,046 புள்ளிகள் உயர்வு



வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நல்ல ஏற்றத்துடன் நிறைவு செய்தன. நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை

குறியீடுகள் லேசான உயர்வுடன் துவங்கின. இதனால், மூன்று நாள் சந்தை கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.



மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் சற்று தணிந்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆகியவை
காரணமாக, நிதி, தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், நாள் முழுதும் சந்தை குறியீடுகள்உயர்வுடன் வர்த்தகமாகின. முடிவில், நிப்டி,சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்



வியாழனன்று அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை,
தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடனும்;
ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ.,குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி (%)



டிரென்ட் 3.96

ஜியோ பைனான்ஸ் 3.31

மஹிந்திரா அண்டு மஹிந்திரா 3.07

பார்தி ஏர்டெல் 3.04
நெஸ்லே இந்தியா 2.77

உயர்வுக்கு காரணங்கள்



1தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவது


2ஆசிய சந்தை போக்குகளில் சாதகமான சூழல் நிலவியது

3முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 7,941 கோடி ரூபாய்க்கு பங்குகளை, நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.93 சதவீதம் குறைந்து,
77.33 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா அதிகரித்து, 86.55 ரூபாயாக இருந்தது.

Advertisement