புதிய கட்டடம் சேதம் பொறியாளர் 'சஸ்பெண்ட்'

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்., அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. தஞ்சாவூரில் ஜூன் 16ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தின் மேற்கூரை பூச்சு இரண்டு முறை பெயர்ந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை தஞ்சாவூர் மாவட்ட செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். அப்போது, கட்டடத்தில் மேற்கூரையில் மின்விசிறி பொருத்தும்போது சிமென்ட் பூச்சு சேதமடைந்தது கண்டறியப்பட்டது.

கட்டுமான விதியை முறையாக பின்பற்றாத உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும், உதவி செயற்பொறியாளர் சுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று வெளியிட்டார். சூரியனார்கோவில் பஞ்., கட்டட மேற்கூரை பூச்சு முழுமையாக அகற்றப்பட்டு, இரண்டு அடுக்கு மேற்கூரை பூச்சாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement