ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்

ஓசூர்; ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மைய பகுதியில் திடீரென ஏற்பட்ட விரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஓசூர் பஸ் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிணைப்பு பகுதியில் இருந்து பாலம் முக்கால் அடி தூரம் விலகி விட்டது. இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் சர்வீஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் வழியாக நாளொன்றுக்கு 80 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஜூன்,2025 - 20:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்
-
தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
-
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
-
மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி
-
எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,
-
திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ
Advertisement
Advertisement