மின்சார வாகனம் மீது பயணிகள் பஸ் மோதி விபத்து: நேபாளத்தில் 7 பேர் உயிரிழப்பு

சித்வான்: நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் இன்று காலை பஸ் ஒன்று மின்சார வாகனத்துடன் மோதியதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து சித்துவான் போலீஸ் அதிகாரி கோவிந்தா புரி, கூறியதாவது:
சித்வான் மாவட்டத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் தங்காதியில் இருந்து காகர்பிட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ், இன்று காலை 10:15 மணியளவில் மின்சார வாகனத்துடன் மோதியது.
இதில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சித்வான் மருத்துவ கல்லுாரிமருத்துவமனை மற்றும் பரத்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது
இவ்வாறு கோவிந்தா புரி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்
-
தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
-
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
-
மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி
-
எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,
-
திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ
Advertisement
Advertisement