தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுாரில் காவிரி கூட்டு குடிநீர் பழுது நீக்கும் தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீர் ரோட்டில் வீணாக வெளியேறியது. தொட்டியினுள் குப்பை, கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயின் உடைப்பை சரி செய்து தொட்டியினுள் இருந்த கழிவுகளை அகற்றி மூடி அமைத்து மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகித்தனர்.

Advertisement