வேலை கிடைக்கல: பி.இ., பட்டதாரி தற்கொலை

மதுரை: மதுரையில் பி.இ., பட்டதாரி, படிப்பிற்கேற்ற வேலை, சம்பளம் கிடைக்கவில்லை என மன அழுத்தத்திற்குள்ளாகி கை அறுத்துக்கொண்டும், துாக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகரைச் சேர்ந்தவர் சுபராஜன் 65. ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய உதவிபொறியாளர். இவரது மனைவி தேன்மொழி, ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குனர். இவர்களது மகள் சென்னையில் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். மகன் அமர்த்தியராஜ் 26, பி.இ., மெக்கானிக் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.

ஒருமாதத்திற்கு முன் மதுரை திரும்பியவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். 'நல்ல வேலை கிடைக்கவில்லை. படிப்பிற்கேற்ற சம்பளமும் கிடைக்கவில்லை' என பெற்றோரிடம் கூறினார்.

நாளடைவில் தாழ்வு மனப்பான்மையால் மனஅழுத்தத்திற்குள்ளானார். இதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கை மணிக்கட்டை 'கட்' செய்திருந்தார்.

Advertisement