அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

திருவள்ளூர் : அம்பத்துார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு 2025ம் ஆண்டில், அனைத்து தொழில் பிரிவுகளிலும் மாணவர்கள் நேரடி சேர்க்கை, கடந்த 19ல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், தங்கள் சேர்க்கை விண்ணப்பத்தை, அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து, உரிய தொழிற்பிரிவுக்கான பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.

நேரில் வரும் விண்ணப்ப தாரர்கள், அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - ஐந்து எடுத்துவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement