சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

டெஹ்ரான்: அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஈரானின் அணுசக்தி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சமீபத்திய நாட்களில் எதிரியின் மிருகத்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு ஆளாகின.
இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த நடவடிக்கை, துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச சமூகம் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஆதரவளிக்கும்.
தியாகிகளின் ரத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த தேசிய தொழில்துறையின் வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பு சட்ட நடவடிக்கைகள் உட்பட ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; பாதியில் சென்னைக்கு திரும்பிய லண்டன் விமானம்!
-
இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!
-
ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய 'பங்கர் பஸ்டர்' குண்டு!
-
கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,
-
பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம்