ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன், 37; மகளிர் சுயஉதவிக்குழு மேனேஜர். யமஹா ஆர்ஒன்-5 பைக்கில் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியதில் கோவர்த்தனன் படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவரான கோவையை சேர்ந்த முகமது இம்ரானிடம், சத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement