துாய்மை திட்ட பணி சேர்மன் துவக்கி வைப்பு

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் துாய்மை திட்டப் பணி துவக்க விழா நடந்தது.

வி. ஆண்டிக்குப்பம் பகுதியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துாய்மை திட்டப் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரகுமார், நகர அவைத் தலைவர் ராஜா, நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement