அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு

தர்மபுரி: தமிழ்நாடு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்-தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட பொருளாளர் அன்ப-ழகன், மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி மாவட்ட நிர்வாகிகள் பலர் பேசினர்.


இதில், பி.எப்., ஆர்.டி.ஏ., பென்சன் நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, ஆஷா போன்ற ஊழி-யர்களை, நிரந்தர ஊழியராக்க வேண்டும். மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலாவதியான பணியிடங்களை புதுப்பிக்க வேண்டும். 8 மணி நேர வேலை உள்ளிட்ட போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படு-வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி, ஜூலை, 9 அன்று நடக்கவுள்ள அகில இந்-திய வேலை நிறுத்தத்தை, தர்மபுரி மாவட்டத்தில், வெற்றிகரமாக நடத்துவது என, முடிவு செய்யபபட்டது.

Advertisement