குழந்தை விற்பனை கும்பல் சிக்கியது

சேலம்: சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 43. இவர் மீது பணமோசடி புகார் தொடர்பாக, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். அதில், அவர், ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து, சேலத்தில் விற்றதும், அதற்கு அவரது மனைவி நாகசுதா, 33, உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.


அத்துடன் குழந்தையை வாங்கி கொடுத்த, ஈரோட்டை சேர்ந்த பர்வீன்பானு, 43, பத்மாவதி, 45, ஸ்ரீதேவி, 43, ஆகியோர் சேர்ந்து, இதுவரை மோகன்ராஜ் மூலம், 3 குழந்தைகளை விற்றி-ருப்பதும், 3 ஆண்டாக, குழந்தை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. போலீசார், மோகன்ராஜ், நாகசுதா உள்பட, 5 பேரை, நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement