சுற்றுலா பயணியரை விரட்டிய யானைகள்

வால்பாறை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.

வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள, அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் ரோட்டை கடக்கின்றன.

இந்நிலையில், வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சுற்றுலாபயணியரை கண்டதும், யானைகள் ஆவேசத்தில் அவர்களை விரட்டின.

பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் சுற்றுலாபயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கேரள அதிரப்பள்ளி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், சுற்றுலாபயணியர் பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் இந்த ரோட்டில் சுற்றுலாவாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை' என்றனர்.

Advertisement