ராமேஸ்வரத்தில் பா.ஜ., வேல் பூஜை

ராமேஸ்வரம் : முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பா.ஜ.,வினர் 300 பேர் ராமேஸ்வரத்தில் வேல் பூஜை செய்து வாகனத்தில் சென்றனர்.
நேற்று மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சென்று பங்கேற்றனர். நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் முருகன் சன்னதி முன்பு பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் 5 அடி உயரம் உள்ள புதிய வேலுக்கு பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.
இதில் பா.ஜ., மாவட்ட பொது செயலாளர்கள் வக்கீல் சண்முகநாதன், குமார், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பா.ஜ., நகர் தலைவர் மாரி, பா.ஜ., நிர்வாகிகள் ராமு, ஆறுமுகலிங்கம், சுரேஷ், ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின் பா.ஜ., வினர், ஹிந்து முன்னணியினர் 20 வாகனங்களில் 300க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்க சென்றனர். இவர்களின் வாகனங்களை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று ஏராளமான மக்கள் வாழ்த்தி அனுப்பினர்.
மேலும்
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்