சர்வதேச யோகா தின விழா
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ். மடையில் உள்ள அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் கே.வி மஞ்சரி பங்கேற்று யோகக் கலையின் பயன்கள் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். ஏராளமான மாணவர்கள் யோகாசனம் செய்து காண்பித்தனர்.
*ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் சார்பில் கோட்ட அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை உதவி கண்காணிப்பாளர் டென்னிஸ் தாசன், ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி ேஷக் தாவூத் செய்தனர்.
மேலும்
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்