பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்
பெரியகுளம் : பெரியகுளத்தில் பா.ஜ., வினர் வேல் ஏந்தி நடந்து ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதித்த நிலையில், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு நேற்று பா.ஜ., மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பெரியகுளத்தில் இருந்து, ஏராளமானோர் வாகனத்தில் செல்ல தயாராகினர். முன்னதாக பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து கையில் வேல் ஏந்தி ஊர்வலமாக செல்வதற்கு நடக்க முயன்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு பா.ஜ., வினர் வாகனங்களில் மாநாட்டிற்கு சென்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
-
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
Advertisement
Advertisement