இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

புதுடில்லி: இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புவனேஸ்வருக்கு (ஒடிசா மாநிலம்) செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 6332) இன்று (ஜூன் 23) காலை 9.00 மணிக்கு 140 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்காக, ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தாமதமாக செல்லும் என்று, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பழுது பார்க்கப்பட்டு, காலை 10.16 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஏற்பட்டதால், பயணியர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதிகள் அடைந்தனர். சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி நிகழ்ந்து வருவதால், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
@block_P@
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் (IX-195) கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காலை 5.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்படிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானி கடைசி நேரத்தில், தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.block_P







மேலும்
-
அமெரிக்கா தாக்கிய அடுத்த நாளே மோதல் தீவிரம்: ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்!
-
முருகன், சிவன் ஹிந்துவா? சீமானுக்கு வந்த திடீர் சந்தேகம்
-
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது
-
தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர்; 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்
-
போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை
-
சேப்பாக்கம் தொகுதிக்கு உதயநிதி 'விசிட்'; குடிசை பகுதிகள் துணியால் மறைப்பு; கருத்து சொல்லுங்க மக்களே!