இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ்., தமால்': சிறப்புகள் ஏராளம்!


புதுடில்லி: இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., தமால் இந்திய கடற்படையுடன் ஜூலை 1ம் தேதி இணைக்கப்படுகிறது.

சிறப்புகள் என்னென்ன?




* 3,900 டன் எடை, 125 மீ., நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில் இந்தியா-ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

* கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.



* இந்த போர்க்கப்பல் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படை உடன் இணைக்கப்படுகிறது.


* இந்த போர்க்கப்பலுக்கு கடவுள்களின் ராஜாவான இந்திரனால் போருக்குப் பயன்படுத்தப்பட்ட புராண வாளைக் குறிக்கும் வகையில், ''தமால்'' என பெயரிடப்பட்டுள்ளது.


இது குறித்து இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது: ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படை உடன் இணைக்கப்பட உள்ளது. ஐ.என்.எஸ்., தமால் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக இருக்கும்.


இந்தியா-ரஷ்யா இடையே உள்ள உறவின் வலிமையை எடுத்துரைக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் 8வது போர்க்கப்பல் தமால். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement