விழிப்புணர்வு முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதி செய்து தருவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

'தார்டி ஆபா ஜன்பகிடாரி அபியான்' திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரே ஷன் கார்டு, சாதி சான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாளை கல்வராயன்மலை ஒன்றியம், கொட்டப்புத்துார், முண்டியூர், ஈச்சங்காடு, ஆரம்பூண்டி, சின்னபலாப்பூண்டி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

தொடர்ந்து 25ம் தேதி பெரும்பூர், தேக்கம்பட்டு, கூடாரம், சங்கராபுரம் ஒன்றியம் க.அலம்பலம், பூட்டை கிராமங்களில்முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

Advertisement