உளுந்துார்பேட்டை பி . டி . ஓ ., அலுவலக கட்டுமான பணி துவக்கம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.

உளுந்துார்பேட்டை, பி.டி.ஓ., அலுவலக கட்டடம் புதிதாக கட்டுவதற்கு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,

கட்டுமானத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அலுவலக கட்டட கட்டுமான பணியை பூமி பூஜையுடன் அமைச்சர் வேலு துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் ராஜவேல், துணை சேர்மன் அலெக்சாண்டர் வரவேற்றனர். பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ஜெயராமன், தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மலையரசன் எம்.பி., நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் டேனியல் ராஜ், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement