கண்களின் வார்த்தைகள் புரியாதோ! காய்கிறது நிலம்; விவசாயிகள் கவலை

திருப்பூர்; அமராவதி புதிய வாய்க்கால் துங்காவி - 2 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் கணேசன், குப்புசாமி உள்பட விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்த பின் கூறியதாவது:

அமராவதி பிரதான வாய்க்காலில், 'துங்காவி - 2' புதிய கிளை வாய்க்கால் வெட்டப்பட்டு 40 ஆண்டுகளாகிறது. உடுமலை ஆர்.டி.ஓ., எடுத்த நடவடிக்கையால், அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பைப் மடைகள் அகற்றப்பட்டன. தற்போது கிளை வாய்க்காலில், தனிநபர் இருவர் மடைகள் வைத்துள்ளனர். கடைமடை பாசனம் கேள்விக்குறியாகிறது.

மொத்தம் 365 ஏக்கர் பாசனம் பெறும் இந்த கிளை வாய்க்காலில், கடைமடையில் மட்டும், 170 ஏக்கர் நிலம், பாசனம் இன்றி உள்ளது. வாய்க்காலில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள மடைகளை அகற்றவேண்டும். பொதுப்பணித்துறையினர், வாய்க்காலை துார்வாரி சீர்படுத்தவேண்டும்.

கடைமடை பாசனத்துக்கு உரிய தண்ணீர் வழங்க வேண்டும். உடுமலை ஆர்.டி.ஓ., மூலம், ஆய்வு நடத்தி, கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement